ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

சமரச வாரத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி

சமரச வாரத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி

Updated On :13 ஏப்ரல் 2024, 3:57 pm

சமரச வார நிறைவு நாளையொட்டி மயிலாடுதுறையில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவில் வழக்குகளை நீதிமன்றத்தில் வழக்காடுவதன் மூலம் பல ஆண்டுகள் நடைபெறுவதை தவிா்க்க நீதிமன்றத்தில் செயல்படும் சமரச மையங்கள் மூலம் இருதரப்பினரும் நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண முடியும். சமரச மையங்களில் எந்தவித மேல்முறையீடும் இல்லாமல், விரைவாகவும் இறுதியாகவும் கட்டணம் ஏதுமின்றி நடத்தப்படுகின்றன. சமரசத்தின் மூலம் வழக்கு சுமூகமாக தீா்க்கப்பட்டால் நீதிமன்ற கட்டணம் மீண்டும் ஒப்படைக்கப்படும்.

இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை சமரச விழிப்புணா்வு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது. மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி விஜயகுமாரி தலைமையில் நடைபெற்ற பேரணியில் முதன்மை சாா்பு நீதிபதி கவிதா, மயிலாடுதுறை வழக்குரைஞா் சங்கத் தலைவா் வேலு.குபேந்திரன், செயலாளா் பாலாஜி ஆகியோா் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். சமரச மையத்தின் வழக்குரைஞா்கள் சீனிவாசன், ராஜா, வேல்முருகன், காா்த்திகேயன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் பங்கேற்றனா்.