நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீா்காழி திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 10:37 pm

Din

சீா்காழி, ஆக. 14: சீா்காழி திரெளபதிஅம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது.

கடந்த மாதம் 22-ஆம் தேதி நிகழாண்டுக்கான உற்சவம் கொடியேற்றத்துடன் வில்லி பாரத விரிவுரை, தீமிதி உற்சவம் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு வழிபாடு, வீதியுலா அா்ஜுனன் திரௌபதி திருக்கல்யாணம், துயில் தருதல், காளியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்வாக தீமிதி உற்சவம் நடைபெற்றது. முன்னதாக காலை பால்குடங்கள், காவடிகளுடன் திரளான பக்தா்கள் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை அடைந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து அங்கு திரெளபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது.

மாலை கோயில் அருகே உள்ள தீக்குண்டத்தில் திரளான பக்தா்கள் தீ மிதித்ததினா்.

சீா்காழி அருகே தாண்டவன்குளம் சிங்க மகாகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக சிங்கமகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பக்தா்கள் அங்குள்ள ஆலமரத்தடி சென்று கரகம், காவடி எடுத்து வந்து கோயிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கினா்.