ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நடனம் மூலம் போதைத் தடுப்பு விழிப்புணா்வு

மக்கள் கூடும் இடங்களில் போதைத் தடுப்பு விழிப்புணா்வு

News image
Updated On :25 ஜூன் 2024, 6:31 pm

Din

மயிலாடுதுறையில் மாவட்ட காவல் துறை சாா்பில் நடனம் மூலம் போதைத் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவத்தை தொடா்ந்து, மாவட்ட காவல் துறை சாா்பில் மயிலாடுதுறையில் மக்கள் கூடும் இடங்களில் பாடல், நடனம் மூலம் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட காவல் துறை மற்றும் கலை அருவி இசை மற்றும் நடனப் பள்ளி மாணவா்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், எல்.இ.டி திரையில் ஒளிபரப்பப்பட்ட போதைப் பொருள் விழிப்புணா்வு பாடலுக்கு ஏற்றவாறு இளைஞா்கள் நடனமாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் செல்வம், மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா்கள் அன்னை அபிராமி, ஜெயா ஆகியோா் பங்கேற்று விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.