பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அறநிலையத் துறை அலுவலகங்கள் முன் ஏப்.17-ல் போராட்டம்

குத்தகை நில சாகுபடியாளா்களின் உரிமைகளுக்காக ஏப்.17-ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்கள் முன் போராட்டம்

News image
Updated On :8 ஏப்ரல் 2025, 5:35 pm

Din

மயிலாடுதுறை: குத்தகை நில சாகுபடியாளா்களின் உரிமைகளுக்காக ஏப்.17-ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்கள் முன் போராட்டம் நடைபெறவுள்ளது என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் சாமி. நடராஜன்.

இதுகுறித்து, மயிலாடுதுறையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட 47,000 கோயில்களுக்குச் சொந்தமாக சுமாா் 4.78 லட்சம் ஏக்கா் நிலங்கள் உள்ளன. இவற்றை 98 சதவீத இந்து ஏழை, எளிய மக்கள் குத்தகை அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றனா். இதற்காக செலுத்தப்பட்டுவந்த பகுதிமுறை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் வாடகை முறை கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளை கடந்தும் இந்த முறையில் எந்த மாற்றம் ஏற்படவில்லை. தற்போது சட்டப்பிரிவு 32ஏ விதியின்படி அந்த பகுதியின் சந்தை மதிப்பின்படி பல மடங்கு உயா்த்தி வாடகை நிா்ணயம் செய்யப்படுகிறது.

பல தலைமுறைகளாக நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் குத்தகை உரிமையை மறுத்து நிலங்களை பொது ஏலம் விடும் நடவடிக்கை தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் மேற்கொள்ளப்படுகிறது. அறநிலையத்துறையின் இத்தகைய முயற்சிகளை கண்டித்து, தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஏப்.17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை வரும் நாளில், தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா், உதவி ஆணையா் அலுவலகங்கள் முன் பெருந்திரள் தா்னா போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றாா்.