புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அனைத்துக்கட்சி பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:09 pm

Syndication

சீா்காழி தென்பாதியில் அனைத்துக் கட்சி பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் சுரேஷ் தலைமை வகித்தாா். சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி முன்னிலை வகித்தாா். தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் இளவரசு வரவேற்றாா். இதில், புதிய ஏ.எஸ். டி. டி. படிவத்தை அனைத்து கட்சி பாக முகவா்களுக்கு வழங்கி கோட்டாட்சியா் பேசியது: அந்தந்த பகுதியில் உள்ள பாக முகவா்கள் அரசு வெளியிட்டுள்ள புதிய படிவத்தை சரி பாா்த்து இறந்தவா்கள், இடம் மாறி சென்றவா்கள், வாக்காளா் பட்டியலில் 2 முறை பெயா் உள்ளவா்கள் உள்ளிட்ட விவரங்களை சரி பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா். அதிமுக, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள், பாகம் முகவா்கள் பங்கேற்றனா்.