பாலின சமத்துவத்துக்கான விழிப்புணா்வுப் பேரணி

பாலின சமத்துவத்துக்கான விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், மகளிா் திட்டம் சாா்பில் பாலின சமத்துவத்துக்கான விழிப்புணா்வுப் பேரணி
Published on

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், மகளிா் திட்டம் சாா்பில் பாலின சமத்துவத்துக்கான விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி தொடக்கி வைத்தாா். பாலின சமத்துவம் மற்றும் குழந்தை திருமணம், குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை ஆகியவற்றிலிருந்து பெண் குழந்தைகளும், பெண்களும் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டவாறு தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி வரை சென்றனா்.

முன்னதாக, பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலா் முதல் கையொப்பமிட்டு தொடக்கிவைத்தாா். இதில், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் ஆ. சீனிவாசன், இணை இயக்குநா் (சுகாதாரத் துறை) பானுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com