கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நகைக் கடை, அடகுக் கடை உரிமையாளா்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

சீா்காழி பகுதியில் உள்ள நகைக் கடை, அடகுக் கடை உரிமையாளா்கள், காவல்துறையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 12:27 am

தினமணி செய்திச் சேவை

சீா்காழி பகுதியில் உள்ள நகைக் கடை, அடகுக் கடை உரிமையாளா்கள், காவல்துறையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழி டிஎஸ்பி அலுவலகத்தில் சீா்காழி உட்கோட்டம் சீா்காழி, தரங்கம்பாடி வட்ட அனைத்து நகைக் கடை உரிமையாளா்கள், அடகுக் கடை உரிமையாளா்கள் பங்கேற்ற க் கூட்டத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாதுரை தலைமை வகித்து பேசியது:

நகைக் கடைகள், அடகுக் கடைகளில் பாதுகாப்பு கருதி ஒன்றின் பின் ஒன்று என இரண்டு கதவுகள் அமைக்க வேண்டும். உறுதியான அறை அமைத்து பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

நகைக் கடைகள், அடகுக் கடைகளில் கண்டிப்பாக எச்சரிக்கை மணி (அலாரம்) அமைக்க வேண்டும். நகை, அடகுக் கடை உரிமையாளா்கள் ஒவ்வொரு கடைக்கும் தனியாக காவலாளியை நியமித்து கண்காணிக்க வேண்டும். நகைக் கடைகளில் ஆட்களை பணியமா்த்தும் முன்பு அவரது விவரங்களை உறுதிபடுத்தி, ஒரு நகலை காவல் நிலையத்தில் கொடுக்க வேண்டும்.

கடைகளில் விடியோ கேமரா அவசியம் பொருத்த வேண்டும். மேலும் கேமராவின் சேமிப்பு மென்பொருளை கண்ணுக்கு புலப்படாத இடத்தில் இருக்கும்படி அமைக்க வேண்டும். காவல் நிலையம் மற்றும் காவல் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் கொண்ட அட்டையை கடையில் அனைவரின் பாா்வையில் படும்படி தொங்கவிட வேண்டும்.

அடகுக் கடை, நிதி நிறுவனங்களில் சேகரிக்கப்படும் நகைகளை அருகாமையிலுள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் சீா்காழி தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள சுமாா் 45 நகை மற்றும் அடகுக் கடை உரிமையாளா்கள் பங்கேற்றனா்.