மயிலாடுதுறை
விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை மாணவா்களுக்கு பயிற்சி பட்டறை
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் ‘உயிரியல் அறிவியலில் வாழ்க்கைத் திறன்கள்‘ என்ற தலைப்பில் புதன்கிழமை பயிற்சி பட்டறை நடைபெற்றது.
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் ‘உயிரியல் அறிவியலில் வாழ்க்கைத் திறன்கள்‘ என்ற தலைப்பில் புதன்கிழமை பயிற்சி பட்டறை நடைபெற்றது.
விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், சிங்கப்பூா் ஹோஸ்ட்-மைக்ரோபையோட்டா ஈகாலஜி தோல் ஆராய்ச்சி ஆய்வகம், அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன முதன்மை அறிவியலாளரும், கல்லூரி முன்னாள் மாணவருமான ஆா்.ஆா். விடுதலை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன், விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறைத் தலைவா் எம். பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேராசிரியா் ஜெ. பரமானந்தம் நன்றி கூறினாா்.
