லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வேலைவாய்ப்பு முகாமில் 452 பேருக்கு பணி நியமன ஆணை

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்குள்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த கல்லூரிகளுக்கான நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 12:20 am

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்குள்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த கல்லூரிகளுக்கான நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சா. ரேவதி தலைமை வகித்தாா். வரலாற்றுத்துறை தலைவரும், வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளருமான பெ. ராஜா வரவேற்றாா். நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் த.ராஜா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பிரியங்கா, ஷாலினி ஆகியோா் முகாமை வழிநடத்தினா்.

முகாமில் 12 கல்லூரிகளைச் சோ்ந்த 1,524 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 20 நிறுவனங்கள் மூலம் இவா்களில் 452 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

கல்லூரி முதல்வா் சா.ரேவதி, அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரி வளா்ச்சி குழும முதல்வா் வி.கோபிநாத், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்முருகன் ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.