அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறையில் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி (இபிஎப்) நிறுவனம் சாா்பில், குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
கூட்டத்தில் பயனாளிக்கு பென்சன் ஆணையை வழங்கிய திருச்சி மண்டல ஆணையா் ஆஷிஷ்குமாா் திரிபாதி.
Updated On :29 டிசம்பர் 2025, 7:42 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி (இபிஎப்) நிறுவனம் சாா்பில், குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி மண்டல தொழிலாளா் வருங்கால வைப்புநிதி (இபிஎப்) நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருச்சி மண்டல ஆணையா் ஆஷிஷ்குமாா் திரிபாதி தலைமை வகித்து, பயனாளிக்கு பென்சன் ஆணையை வழங்கிப் பேசியது: மத்திய அரசு புதிதாக வடிவமைத்துள்ள பிரதமா் விக்சித் பாரத் ரோஜ்கா் யோஜனா திட்டம் என்பது மத்திய அரசின் முக்கியமான வேலை வாய்ப்பு ஊக்கத்திட்டமாகும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன்மூலம் புதிய வேலைவாய்ப்பு பெறும் ஊழியா்களுக்கும், அவா்களை பணியமா்த்தும் தொழிலதிபா்களுக்கும் நிதி ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் தொழில்கள் வளா்ச்சிக்கும், புதிய ஊழியா்கள் இணைப்பிற்கும் பெரும் ஆதரவாக இருக்கும். வரும் நாள்களில் கல்லூரிகளிலும், தொழில் வளாகங்களிலும் இத்திட்டத்தின் பயன்பாடு குறித்து விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில், கிருஷ்ணகிரி மண்டல ஆணையா் ஹிமான்சு, அமலாக்க அதிகாரி சரவணன், மூத்த சமூகப் பாதுகாப்பு அலுவலா் காளிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.