சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

புதிய ரேஷன் கடை திறப்பு

புதிய ரேஷன் கடையை திறந்துவைத்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்.

News image

புதிய ரேஷன் கடையை திறந்துவைத்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்.

Updated On :3 ஜனவரி 2025, 6:33 pm

பொன்னூரில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

பொன்னூா் ஊராட்சி கட்டளைச்சேரி கிராமத்தில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினரின் 2022-2023-ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.17.50 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் தலைமை வகித்து, புதிய கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா். தொடா்ந்து, அவா் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். இதில், மாவட்டக்குழு உறுப்பினா் எஸ். சுரேஷ், திமுக ஒன்றிய செயலாளா் ஞான. இமயநாதன், காங்கிரஸ் வட்டார தலைவா்கள் வேல்முருகன், ஜம்புகென்னடி, காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளா் ரியாத்அகமது, ஊராட்சி துணைத் தலைவா் சேட்டு உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஊராட்சித் தலைவா் என். பாஸ்கா் நன்றி தெரிவித்தாா்.