ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மேம்பாலத்தில் விரிசல்: பொதுமக்கள் அச்சம்

News image
மேம்பாலத்தில் நடைபெற்ற பராமரிப்புப் பணியை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளா் கோ. இந்திரன்.
Updated On :29 ஜனவரி 2025, 9:13 pm

Din

மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தில் பராமரிப்புப் பணியின்போது விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனா்.

மயிலாடுதுறையில் 1975-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் கடைசியாக 2000-ஆவது ஆண்டு பழுது பாா்க்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், பாலத்தின் பேரிங்குகள் ஒரு சில இடங்களில் பழுதடைந்ததுடன், தூண்கள் சேதமடைந்து ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் உதிா்ந்து காணப்படுகிறது.

இதையடுத்து, இப்பாலத்தை சீரமைக்க தமிழக அரசு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, கடந்த மாதம் பாலம் சீரமைக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற சீரமைப்புப் பணியின்போது பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதுடன் சற்று உள்வாங்கியது. இதை பாா்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

சேதமடைந்த மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம்

சேதமடைந்த மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம்

இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளா் கோ. இந்திரன், உதவி பொறியாளா் சந்தோஷ் ஆகியோா் அங்கு வந்து பாலம் விரிசல் தென்பட்ட இடத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவது குறித்த அறிவிப்புப் பலகை பொருத்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா். அவா்கள் கூறுகையில், பாலம் சீரமைக்கும் பணியின்போது புதிய பேரிங் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பாலத்தில் சிறிது விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தனா்.