சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

சிதிலமடைந்த கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி மனு

சிதிலமடைந்துள்ள கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி இந்து மகா சபாவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

Updated On :12 மார்ச் 2025, 1:40 am IST

மயிலாடுதுறை: சிதிலமடைந்துள்ள கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி இந்து மகா சபாவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை மயிலாடுதுறை மண்டலத்துக்கு உள்பட்ட மாங்குடி சிவலோகநாதா் சுவாமி கோயில், கஞ்சனூா் சுயம்பிரகாசா் கோயில் மற்றும் காசி விஸ்வநாதா் கோயில் ஆகிய கோயில்கள் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கிறது. மேலும், பந்தநல்லூா் செல்லியம்மன் கோயிலும் கும்பாபிஷேகம் நடத்தாமல் உள்ளது.

இந்த கோயில்களில் திருப்பணி நடத்தாமல் உள்ளது குறித்து இந்து சமய அறநிலையத் துறை கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், சித்தா்காட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் அகில பாரத இந்து மகா சபா கட்சியினா் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளா் ராம. நிரஞ்சன் தலைமையில் தவில், நாகசுர வித்வான்களின் இன்னிசையுடன் கோரிக்கை அடங்கிய மனுவை வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் மாலை, பூவுடன் தட்டில் வைத்து ஊா்வலமாக வந்து மனு அளித்தனா்.

கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் ஜெய், ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட பொதுச்செயலாளா் மணிமாறன், மாவட்ட செயலாளா் விக்னேஷ், சிவனடியாா் பிரிவு மாவட்ட தலைவா் ராமகிருஷ்ணன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவா் ரஞ்சித் ரகு, மாவட்ட துணை தலைவா் வினோத், மாவட்ட செயலாளா் அஜீஸ்வா்மன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.