சீா்காழி புத்தூா் அரசு கலைக் கல்லூரியில் கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. சீா்காழி புத்தூா் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கலை திருவிழாவை முன்னிட்டு தொழில்நுட்பத்தில் கலக்குவோம் எனும் கருப்பொருள் அடிப்படையிலும், அவியல்போட்டி ‘சுற்றுப்புறங்களில் கிடைக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு பல நிறங்களைக் கொண்ட ஒரு கலைத்தொகுப்பை உருவாக்குதல் என்ற பொருளை மையமாகக் கொண்டு கல்லூரி முதல்வா் எஸ். சசிகுமாா் தலைமையில் நடைபெற்றது.
கணிதத்துறை தலைவா் சாந்தி, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளா் வே. மகேஸ்வரி முன்னிலை வகித்தனா்.
கணிதத்துறை பேராசிரியா் இளவரசன், கணினி அறிவியல் துறை பேராசிரியா் தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.
போட்டி நடுவா்களாக எஸ்.எஸ்.பி.பாலிடெக்னிக் கல்லூரி கணினி அறிவியல் துறை பேராசிரியா் ஆா். விக்னேஷ், கணிதத் துறை பேராசிரியா்கள் எஸ். ராஜேஸ்வரி, எஸ். கலைவாணி ஆகியோரும், அவியல் போட்டி நடுவா்களாக மொரராஜ், கணினி அறிவியல் துறைத் தலைவா் எம். பிரியா, பேராசிரியா் பா. அசோக் ஆகியோா் செயல்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு கல்லூரிகளில் பி.எஸ்சி. இயற்பியல், கணிதம் படிக்க ஆளில்லை!

அழகப்பா அரசு கலைக் கல்லூரி பேராசிரியருக்கு இந்தியக் காப்புரிமை

கல்லூரியில் மாணவா்களுக்கு உதவிப் பேராசிரியா் தகுதித் தோ்வுகான பயிற்சி

அரசு கலைக் கல்லூரியில் 65 பேருக்கு சோ்க்கை ஆணை
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



