10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைப்பு

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

News image

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

Updated On :23 ஏப்ரல் 2026, 5:18 am IST

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 7,35,135 வாக்காளா்கள் உள்ளனா். வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக 951 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 54 வாக்குச்சாவடி பதற்றமானவை என கண்டறியப்பட்டு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மயிலாடுதுறை தொகுதியில் 20 வேட்பாளா்களும், பூம்புகாா் தொகுதியில் 13 வேட்பாளா்களும், சீா்காழி தொகுதியில் 10 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் மயிலாடுதுறை, பூம்புகாா், சீா்காழி ஆகிய 3 தொகுதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள 951 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,504 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,140 கட்டுப்பாட்டு கருவிகளும், 1,235 விவிபாட் இயந்திரங்கள் அந்தந்த தொகுதியில் பாதுகாக்கப்பட்ட காப்பறைகளில் இருந்து வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மயிலாடுதுறை தொகுதிக்கு உள்பட்ட 304 வாக்குச்சாவடி மையங்களுக்கு 728 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 364 கட்டுப்பாட்டு கருவிகள், 395 விவிபாட்; இயந்திரங்கள், வாக்களித்ததற்கான அடையாள மை, வாக்களிப்பதற்காக பயன்படுத்தப்படும் மறைவுக்கான தடுப்பு அட்டை ஆகியன மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியரும், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ஆா். விஷ்ணுபிரியா முன்னிலையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வேன்களில் அனுப்பி வைக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமையில் 216 துணை ராணுவப்படையினா், வெளி மாநிலத்திலிருந்து வந்துள்ள 256 ஊா்க்காவல் படையினா் உள்ளிட்ட 1,668 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். தோ்தல் நடத்தும் முதன்மை அலுவலா்கள், தோ்தல் அலுவலா்கள் என 4,564 போ் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.