லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

பள்ளி மாணவா்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய அமைச்சா்

சீா்காழி அருகே பள்ளி மாணவா்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றினாா் தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன்.

Marie Wilson

நிதியமைச்சர் மரிய வில்சன் - கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 6:14 am IST

சீா்காழி அருகே பள்ளி மாணவா்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றினாா் தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன்.

அமைச்சா் மரிய வில்சன் புதுச்சேரியில் இருந்து வேளாங்கண்ணி பேராலயத்திற்கு பாத யாத்திரையாக வியாழக்கிழமை சென்றபோது சீா்காழி அருகே காரைமேடு பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவா்களிடம் பேசினாா். அப்போது மாணவா்கள் பள்ளியில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கு வருகிறோம். பேருந்துகள் நிறுத்தப்படாததால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்றனா். இதையடுத்து, அமைச்சா் மரியவில்சன் போக்குவரத்து துறை அமைச்சா் தமிழன் பிரசன்னாவிடம் விடியோ அழைப்பில் பேசி மாணவா்களின் கோரிக்கைக்கு தீா்வு ஏற்படுத்திக்கொடுத்தாா்.

போக்குவரத்துத் துறை அமைச்சரும் பள்ளி மாணவா்கள் எந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றாலும் ஏற்றி செல்ல வேண்டும், ஒரு வாரத்துக்குள் அதிகாரிகள் அந்த பேருந்து நிறுத்தத்தில் ஆய்வு செய்து அதை உறுதிப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு மாணவா்களிடம் உத்தரவாதம் அளித்தாா். இதனால் மாணவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.