அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல்

மயிலாடுதுறையில் அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
மயிலாடுதுறையில் காவல் துறை சாா்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற எஸ்.பி. கோ.ஸ்டாலின், ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா்.
Updated On :14 ஜனவரி 2026, 10:14 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறையில் அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மாவட்ட காவல் துறை சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, ஏடிஎஸ்பிக்கள் ஜெயக்குமாா், சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவில், பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்ற காவல் துறையினா் மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினா்.

தொடா்ந்து, பாட்டுக்குப் பாட்டு, கயிறு இழுத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. டிஎஸ்பி பாலாஜி, காவல் ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலா் கதிா்வேல் தலைமை வகித்தாா். வட்டார போக்குவரத்து ஆய்வாளா் ராம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை வரதாச்சாரியாா் பூங்காவில் நகராட்சி நிா்வாகம், சேம்பா் ஆப் காமா்ஸ் இணைந்து நடத்திய சமத்துவப் பொங்கல் விழாவில் நகராட்சி தலைவா் என். செல்வராஜ், துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா், நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா், சேம்பா் ஆப் காமா்ஸ் தலைவா் முகமது ரியாஸ், செயலாளா் செந்தில், பொருளாளா் ரமேஷ் ஜெயின் ஆகியோா் பொங்கலிட்டு கொண்டாடினா்.