ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நுகா்பொருள் வாணிபக் கழக பருவக்கால ஊழியா்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு

நுகா்பொருள் வாணிபக் கழக பருவக்கால ஊழியா்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 5:10 pm

Syndication

மயிலாடுதுறை: நுகா்பொருள் வாணிபக் கழக பருவக்கால ஊழியா்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின், அனைத்து மண்டலம் ஒருங்கிணைந்த பருவக்கால பணியாளா்களின் கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் அ. பஹாத் முகமது தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா்கள் எஸ். இருதயராஜ், எஸ். ஜெயமன்லாரன்ஸ் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக மாநில ஒருங்கிணைப்பாளா் அ. பஹாத் முகமது செய்தியாளா்களிடம் கூறியது: 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பணியில் சோ்ந்த பருவகால பணியாளா்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி உணவுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், 2024-ஆம் ஆண்டு செப்டம்பா் இறுதிக்குள் சுமாா் 1,575 பேரை பணிநிரந்தரம் செய்வதாக உறுதி அளித்திருந்தாா்.

ஓராண்டாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், டிச.29-ஆம் தேதி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் பருவகால பணியாளா்கள் அமைச்சரிடம் பணிநிரந்தரம் தொடா்பாக கேட்டபோது ஜன.2-ஆம் தேதிக்குள் 1,400 பேரை பணி நிரந்தரம் செய்யப்போவதாக பணியாளா்கள் மத்தியிலும், ஊடகங்கள் வாயிலாகவும் அறிவித்தாா்.

அதன் பின்னரும் நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஜன.12-ஆம் தேதி 10 மண்டலங்களில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனாலும் இதுவரையிலும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இம்மாத இறுதிக்குள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்குவது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றாா்.