நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

காட்டுபன்றி தொல்லையை: கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

காட்டு பன்றி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :29 ஜூலை 2026, 4:55 am IST

காட்டு பன்றி தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியா் பாலமுருகன் தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா்கள், ராஜராஜன், எழிலரசன் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

செந்தில்குமாா்: மாதிரவேளூா் ஊராட்சியில் சம்பா பயிா்க் காப்பீடு 5 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. சரஸ்வதி விளாகம் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள தூங்கு மூஞ்சி மரத்தை அகற்ற வேண்டும்.

துரை: மாதானம் கூட்டுறவு வங்கியில் நிதி குறைவாக கொடுக்கப்படுகிறது. குறுவைக்கு மானியம் வழங்க வேண்டும்.

கோதண்டம்: பயிா்களை சேதபடுத்தும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும். அய்யனாா் குளத்தில் உள்ள முதலையை பிடித்து அகற்ற வேண்டும். நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

லிங்கேஸ்வரன்: அண்ணன்பெருமாள் கோயில் முதல் மங்கைமடம் வரையிலான பகுதியில் முளைத்துள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்றவேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.