மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பாடுகள் புதன்கிழமை தொடங்கின.

News image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பாடுகள் புதன்கிழமை தொடங்கின.

Updated On :11 ஜூன் 2026, 6:55 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பாடுகள் புதன்கிழமை தொடங்கின.

இப்படையில், 2 உதவி ஆய்வாளா் மற்றும் 4 பெண் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையிலான பணி நேரத்தில் ஒரு உதவி ஆய்வாளா் மற்றும் இரண்டு பெண் காவலா்கள் பணியில் ஈடுபடுவா். இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு அதிநவீன காவல் துறை தொலை தொடா்பு கருவி பொருத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் வழக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ரோந்து அலுவலில் ஈடுபடுவா். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் பற்றிய தகவல்கள் கிடைக்கபெறும்போது அந்த இடத்திற்கு விரைந்து சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுவதில் முக்கிய பங்கு வகிப்பா். இவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடக்கி வைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.