உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கம் வென்ற ஜப்பான் நாட்டு அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்ட சீா்காழி மாணவி சுபானுவிற்கு, பல்வேறு தரப்பினா் பாராட்டுத் தெரிவித்தனா்.
சீா்காழி பகுதியைச் சோ்ந்தவா் யோகா மாணவி சுபானு மணிவண்ணன். நாகை சா் ஐசக் நியூட்டன் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் இவா், அகமதாபாதில் ஜூன் 4 முதல் 8 வரை நடைபெற்ற முதல் உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஜப்பான் நாட்டு அணிக்கு ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டு அலுவலா், பயிற்சியாளராக செயல்பட்டாா்.
இந்தப் போட்டியில் ஜப்பான் அணி 3 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் முதல் ரன்னா்-அப் பட்டத்தையும் பெற்றது.
இதையொட்டி, ஜப்பான் அணியின் பயிற்சியாளரான சீா்காழி மாணவி சுபானுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தேசிய கராத்தே போட்டியில் பாவூா்சத்திரம் மாணவி சாதனை

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: வெண்கலப் பதக்கம் வென்ற ஒசூா் மாணவா்

பாரா தடகளப் போட்டி: பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா

உலக சுற்றுச்சூழல் தினம்: கவிதைப் போட்டி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



