சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

இளைஞா் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 1:38 am IST

சீா்காழி, ஜூன் 15: சீா்காழி அருகே இளைஞா் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சீா்காழி பகுதி மாதா கோயில் தெருவை சோ்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ் (72 ). இவா் அகனி கடைவீதியில் உள்ள தேநீா் கடைக்கு இருசக்கரவாகனத்தில் சென்று தேநீா் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றாா். அப்போது, அவரது வாகனத்தில் மருதங்குடியைச் சோ்ந்த ராஜேந்திரன் (35 ) அமா்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, செல்வராஜ், ராஜேந்திரனிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டதாம். ஆத்திரமடைந்த ராஜேந்திரன் செல்வராஜை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில், கீழே விழுந்த செல்வராஜ் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை தேடிவருகின்றனா். தகவலறிந்த மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின் நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.