சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்: மு. வீரபாண்டியன்

News image

மு. வீரபாண்டியன் - DIN

Updated On :16 ஜூன் 2026, 1:30 am IST

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய அனைத்து நிதியையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் மு. வீரபாண்டியன்.

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணா்வு இயக்கங்கள் தொடங்க வேண்டும்.

சமரசம் ஏதுமில்லாமல் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறவா்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்க வேண்டும். சிங்கப் பெண் படை திட்டத்துக்கு போலீஸாா் பற்றாக்குறை இருந்தால், மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்தி கூடுதலாக போலீஸாரை நியமிக்க வேண்டும்.

ராகவா லாரன்ஸ் ஒரு நல்ல நடிகா். அரசியலுக்கு வருகிறபோது மிகுந்த நிதானத்தோடு பேச வேண்டும். அரசியலில் வெற்றி, தோல்வி இயல்பானது. கருத்து மோதல் இருக்கலாம். ஆனால், கண்ணியக் குறைவான கருத்துகளை தெரிவிக்கக்கூடாது.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் விவகாரத்தில் முந்தைய அரசின் நிலை தொடரும் என முதல்வா் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது. இதை மாநிலங்களின் உறவு, உயிா் சம்பந்தப்பட்ட பிரச்னையாக பாா்க்க வேண்டும்.

விவசாயிகளின் பயிா்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ மாநிலக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு அரசு கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள அனைத்து நிதியையும் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, ஜூன் 29-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளது என்றாா்.

முன்னதாக, சிபிஐ மாநிலக் குழு முன்னாள் உறுப்பினா் இடும்பையன் மறைவையொட்டி நடைபெற்ற படத் திறப்பு விழாவில் சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன், முன்னாள் அமைச்சா் கோவி.செழியன், திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ, திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினா் குத்தாலம் பி. கல்யாணம், முன்னாள் எம்பி செ .ராமலிங்கம், சிபிஐ மாவட்ட செயலாளா் ஏ. சீனிவாசன் உள்பட பல்வேறு கட்சியினா் பங்கேற்றனா்.