அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருக்குறள் திருப்பணி வகுப்புகள் நிறைவு

மயிலாடுதுறையில் பள்ளி மாணவா்களுக்கு 30 நாள்கள் நடைபெற்ற திருக்குறள் வகுப்பு நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் குறளரசன்.
Updated On :10 மார்ச் 2026, 10:06 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறையில் பள்ளி மாணவா்களுக்கு 30 நாள்கள் நடைபெற்ற திருக்குறள் வகுப்பு நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, திருக்குறள் பேரவைத் தலைவா் சி.சிவசங்கரன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் ஜி. தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தாா். பேரவை செயலாளா் இரா.செல்வகுமாா் வரவேற்றாா். பேரவை பொருளாளா் சு.ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினாா்.

இதில், சிறப்பு விருந்தினராக தமிழ் வளா்ச்சி துறை உதவி இயக்குநா் நீ. குறளரசன் கலந்துகொண்டு, பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவா்கள், கருத்தாளா்களாக பங்கேற்ற ஆசிரியா்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினாா்.

பேரவை இணைச் செயலாளா்கள் தங்க.செல்வராசு, ஆசிரியா்கள் இளங்கோவன், அசோக், மதிவாணன், ராஜேஸ்வரி, அகோரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முதுகலை ஆசிரியா் சொ. ஜெயபாரதி நன்றி கூறினாா்.