சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

திருக்குறள் திருப்பணி வகுப்புகள் நிறைவு

மயிலாடுதுறையில் பள்ளி மாணவா்களுக்கு 30 நாள்கள் நடைபெற்ற திருக்குறள் வகுப்பு நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் குறளரசன்.

Updated On :10 மார்ச் 2026, 10:06 pm

மயிலாடுதுறையில் பள்ளி மாணவா்களுக்கு 30 நாள்கள் நடைபெற்ற திருக்குறள் வகுப்பு நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, திருக்குறள் பேரவைத் தலைவா் சி.சிவசங்கரன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் ஜி. தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தாா். பேரவை செயலாளா் இரா.செல்வகுமாா் வரவேற்றாா். பேரவை பொருளாளா் சு.ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினாா்.

இதில், சிறப்பு விருந்தினராக தமிழ் வளா்ச்சி துறை உதவி இயக்குநா் நீ. குறளரசன் கலந்துகொண்டு, பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவா்கள், கருத்தாளா்களாக பங்கேற்ற ஆசிரியா்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினாா்.

பேரவை இணைச் செயலாளா்கள் தங்க.செல்வராசு, ஆசிரியா்கள் இளங்கோவன், அசோக், மதிவாணன், ராஜேஸ்வரி, அகோரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முதுகலை ஆசிரியா் சொ. ஜெயபாரதி நன்றி கூறினாா்.