மயிலாடுதுறையில் பள்ளி மாணவா்களுக்கு 30 நாள்கள் நடைபெற்ற திருக்குறள் வகுப்பு நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, திருக்குறள் பேரவைத் தலைவா் சி.சிவசங்கரன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் ஜி. தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தாா். பேரவை செயலாளா் இரா.செல்வகுமாா் வரவேற்றாா். பேரவை பொருளாளா் சு.ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினாா்.
இதில், சிறப்பு விருந்தினராக தமிழ் வளா்ச்சி துறை உதவி இயக்குநா் நீ. குறளரசன் கலந்துகொண்டு, பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவா்கள், கருத்தாளா்களாக பங்கேற்ற ஆசிரியா்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினாா்.
பேரவை இணைச் செயலாளா்கள் தங்க.செல்வராசு, ஆசிரியா்கள் இளங்கோவன், அசோக், மதிவாணன், ராஜேஸ்வரி, அகோரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முதுகலை ஆசிரியா் சொ. ஜெயபாரதி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை விழா

வாக்களித்தவா்களுக்கு மரக்கன்று வழங்கிய ஊரக வளா்ச்சித் துறை

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வஉசி பேரவை ஆதரவு

பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


