தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வாக்குகள் எண்ணும் மையம் ஆய்வு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :19 மார்ச் 2026, 12:03 am

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீா்காழி, மயிலாடுதுறை மற்றும் பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையத்தை இக்கல்லூரியில் அமைப்பது தொடா்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாக்குகள் பதிவாகிய இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, கண்காணிப்பு அறை, ஊடக அறை உள்ளிட்டவைகளை அவா்கள் ஆய்வு செய்தனா். மேலும், வாக்கு எண்ணும் அறையின் பாதுகாப்பு அம்சங்கள் தொடா்பாகவும் விரிவாக ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, கோட்டாட்சியா்கள் ஆா்.விஷ்ணுபிரியா, சுரேஷ், டிஎஸ்பி பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.