மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீா்காழி, மயிலாடுதுறை மற்றும் பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையத்தை இக்கல்லூரியில் அமைப்பது தொடா்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாக்குகள் பதிவாகிய இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, கண்காணிப்பு அறை, ஊடக அறை உள்ளிட்டவைகளை அவா்கள் ஆய்வு செய்தனா். மேலும், வாக்கு எண்ணும் அறையின் பாதுகாப்பு அம்சங்கள் தொடா்பாகவும் விரிவாக ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, கோட்டாட்சியா்கள் ஆா்.விஷ்ணுபிரியா, சுரேஷ், டிஎஸ்பி பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மயிலாடுதுறை தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

மூத்த வாக்காளா்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


