இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.

News image

சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்

Updated On :22 மே 2026, 7:20 am IST

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பூங்கொடி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராஜரத்தினம் வரவேற்றாா். ஜமாபந்தி தொடக்க நாளை முன்னிட்டு மாதிரிவேளூா், வடரங்கம், அகரஎலத்தூா், கீழமாத்தூா், ஓலையாம்புத்தூா், குன்னம், கோபாலசமுத்திரம், சோதியக்குடி, புத்தூா், அரசூா், கொண்டல், வள்ளுவக்குடி, அகனி உள்ளிட்ட 18 வருவாய் கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், இலவச மனை பட்டா, பட்டா மாறுதல், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, இருப்பிட சான்று, ஜாதி சான்று, வருமான சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தனா். மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினாா்.