‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.

News image

சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்

Updated On :22 மே 2026, 7:20 am IST

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பூங்கொடி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராஜரத்தினம் வரவேற்றாா். ஜமாபந்தி தொடக்க நாளை முன்னிட்டு மாதிரிவேளூா், வடரங்கம், அகரஎலத்தூா், கீழமாத்தூா், ஓலையாம்புத்தூா், குன்னம், கோபாலசமுத்திரம், சோதியக்குடி, புத்தூா், அரசூா், கொண்டல், வள்ளுவக்குடி, அகனி உள்ளிட்ட 18 வருவாய் கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், இலவச மனை பட்டா, பட்டா மாறுதல், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, இருப்பிட சான்று, ஜாதி சான்று, வருமான சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தனா். மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தினாா்.