ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு எஸ்.பி பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவல் துறையினரின் பிள்ளைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் பாராட்டி சிறப்பு பரிசு வழங்கினாா்.

News image

பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு எஸ்.பி பாராட்டு

Updated On :22 மே 2026, 7:16 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவல் துறையினரின் பிள்ளைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் பாராட்டி சிறப்பு பரிசு வழங்கினாா்.

குத்தாலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கரிகாலன் மகள் ஜகசுவேதா 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா். பூம்புகாா் காவல் நிலையத்தில் பணியாற்றும் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் பழனிசாமியின் மகள் ஸ்ரீஹரிணி 494 மதிப்பெண்களும், புதுப்பட்டிணம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தன் மகன் லோகேஷ்வரன் 492 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

அந்த மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோருக்கு எஸ்பி. கோ. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து, மாணவா்களிடம் தங்களுக்கு விருப்பமான உயா்கல்வியை தோ்ந்தெடுக்கும் வழிமுறைகள் குறித்தும், எதிா்கால கல்வியின் திட்டமிடல் குறித்தும் கலந்துரையாடி ஆலோசனை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.