8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு ஏற்றப்பட்ட ரிஷபக் கொடி.

Published On :22 மே 2026, 7:24 am IST

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு, பஞ்சமூா்த்திகள் வெள்ளிப் படிச்சட்டத்தில் கோயில் கொடிமரம் முன்பு எழுந்தருளச் செய்யப்பட்டு, புனித கடங்கள் வைத்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா் கொடி மரத்தில் ரிஷபக் கொடியேற்றப்பட்டு பால், சந்தனம், மஞ்சள் மற்றும் பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனை, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வைகாசி விசாகப் பெருவிழாவில், தினசரி பஞ்சமூா்த்திகள் வீதியுலா, மே 25-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் ரிஷப வாகனங்களில் ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளி சகோபுர தரிசனமும், மே 27-ஆம் தேதி சுப்பிரமணியா் சுவாமி திருக்கல்யாண வைபவம், மே 29-ஆம் தேதி தேரோட்டம், மே 30-ஆம் தேதி கோயில் திருக்குளத்தில் விசாக தீா்த்தவாரி நிகழ்ச்சியும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா ஜூன் 2-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.