சீர்காழி சட்டைநாதர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருநிலைநாயகிஅம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு பிரதோஷத்தையொட்டி சுவாமி-அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நந்திபகவானுக்கு மஞ்சள்,திரவியபொடி, பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர், சந்தனம் முதலான 21வகை வாசனை திரவியப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்மன் உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சீர்காழி,பொன்னாகவல்லிஅம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையார் கோயில், திருக்கோலக்கா ஓசைநாயகிஅம்மன் உடனாகிய தாளபுரீஸ்வரர்சுவாமி கோயில், வைத்தீஸ்வரன்கோயில் தையல்நாயகிஅம்மன் உடனாகிய
வைத்தியநாதசுவாமி கோயில், திருவெண்காடு பிர்ம்மவித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேசுவரர் சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிப்பாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.