நாகை மாவட்டம், குத்தாலத்தில் உள்ள வட்டார வள மைய மேற்பார்வையாளர் அலுவலக கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
குத்தாலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மைய அலுவலகம் செயல்பட்டு வந்தது.
அந்தக் கட்டடம் பழுதடைந்ததால் அங்கு செயல்பட்டு வந்த அலுவலகமானது தற்போது மாற்று இடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பழையக் கட்டடத்தின் அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பை மேட்டில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி, கட்டடத்துக்கும் பரவியது. இதில், அங்கிருந்த கோப்புகள் எரிந்து நாசமாகின.
தகவலறிந்த மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யமுனையில் உல்லாசப் படகு சேவை: அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு

பாரம்பரிய பண்பாட்டினைப் பின்பற்றும் மலேசியத் தமிழா்கள்!

ஆரணி ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவாசகம், தேவாரத்தை அரசுடைமையாக்க வேண்டும்: சிவாக்கா் தேசிய சுவாமிகள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

