காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, பாமக சார்பில் வரும் 11-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரியில் நமக்கு வழங்க வேண்டிய நீரை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்காமல், கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலை கருத்தில்கொண்டு, மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் விளைவிக்கிறது. காவிரி நதிநீர் விவகாரத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தத் தாமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் வரும் 11-ஆம் தேதி பாமக சார்பில் மாபெரும் பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆகையால், அன்றைய தினம் பொதுமக்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் பொது வேலைநிறுத்தத்துக்கு முழு ஆதரவு தந்து வெற்றியடையச் செய்யவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

