பிப். 8-இல் நாட்டுக் கோழி வளர்ப்புப் பயிற்சி

நாகை கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், நாட்டுக் கோழிகள் வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நாகையில் பிப். 8- ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
Updated on
1 min read

நாகை கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், நாட்டுக் கோழிகள் வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நாகையில் பிப். 8- ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
நாகை, கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கால்நடை ஆராய்ச்சி மையத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது.
முகாமில், நாட்டுக் கோழி இனங்கள், வளர்ப்பு முறைகள், கொட்டகை அமைப்பு,  தீவன மேலாண்மை, குஞ்சுகள் பராமரிப்பு, நோய்த் தடுப்பு முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், நேரில் அல்லது 04365- 247123 என்ற தொலைபேசி எண்ணில் நாகை, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை முன்கூட்டியே தொடர்பு கொள்ளுமாறு பயிற்சி மையத் தலைவர் - உதவிப் பேராசிரியர் சி. சுரேஷ் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com