அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விற்பனைக்கு குவிக்கப்படும் தர்ப்பூசணி பழங்கள்

கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், சீர்காழி பகுதியில் விற்பனைக்காக தர்ப்பூசணி பழங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:08 am

DIN

கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், சீர்காழி பகுதியில் விற்பனைக்காக தர்ப்பூசணி பழங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக வெயிலின் தாக்கம் அவ்வளவாகத் தெரியவில்லை. இன்னும் சில தினங்களில் பனிப் பொழிவு படிப்படியாக குறையத் தொடங்கி, கோடை காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும். இதனால், இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட குளிர்ச்சித் தரும் பானம் மற்றும் காய்-கனிகளின் விற்பனை அதிகரிக்கும். நிகழாண்டு, கோடை காலம் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், சீர்காழி பகுதியில் தற்போதே தர்ப்பூசணிப் பழங்கள் விற்பனைக்கு வரத்தொடங்கியுள்ளன.
இதுகுறித்து தர்ப்பூசணி வியாபாரிகள் கூறும்போது, தற்போது பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தர்ப்பூசணிப் பழங்களின் விற்பனை மந்தமாக உள்ளது. பனி குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது தர்ப்பூசணிப் பழங்களின் விற்பனை அதிகரிக்கும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.