பூம்புகார் மேலையூரில் உள்ள பத்தினிக் கோட்டம் என்றழைக்கப்படும் கண்ணகி கோயிலில், கண்ணகி வீடுபேறு அடைந்த நாள் வழிபாடு திங்கள்கிழமை (ஜூலை 23) நடைபெறுகிறது.
கற்புக்கரசி, பெண்மையின் தெய்வம் என போற்றப்படும் கண்ணகி, நாகை மாவட்டம் பூம்புகாரில் வாழ்ந்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. கண்ணகி ஆடி மாதம் அனுஷ நட்சத்திரத்தன்று பூப்பல்லக்கில் ஏறி, வைகுண்டம் சென்று, வீடுபேறு அடைந்ததாக ஐதீகம்.
இதையொட்டி, ஆண்டுதோறும் ஆடி மாத அனுஷ நட்சத்திர தினத்தன்று, பூம்புகார் மேலையூரில் உள்ள கண்ணகி கோயிலான பத்தினிக் கோட்டத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி நிகழாண்டு, கண்ணகி வீடுபேறு அடைந்த நாள் வழிபாடு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இதையொட்டி, கண்ணகி சிலைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பத்தினிக் கோட்ட காப்பாளரும், சீனிவாசா மேல்நிலைப் பள்ளி செயலாளருமான ராஜசேகரன், உதவி தலைமையாசிரியர் ரவி ஆகியோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசியப் போட்டிக்கான இந்திய பாட்மின்டன் அறிவிப்பு: பி.வி. சிந்து, சாத்விக் - சிராக் பங்கேற்பு
தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைது

திமுகவை பின்பற்றிதான் தவெக செயல்பட முடியும்: மு.க.ஸ்டாலின்






