தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

பொங்கலுக்கு தயாரான வாழை மரங்கள் சேதம்

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில், கஜா புயலால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை சாகுபடி முற்றிலும் சேதமடைந்ததால், விவசாயிகள்

Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST


நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில், கஜா புயலால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை சாகுபடி முற்றிலும் சேதமடைந்ததால், விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கிடாரங்கொண்டான், கீழையூர், பொன்செய், முடிகண்டநல்லூர், மேலப்பாதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை பயிரிடப்பட்டு வருகிறது. கஜா புயலால் ஒட்டுமொத்த வாழை சாகுபடியும் சேதமடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட கிடாரங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜசேகர் கூறியது:
கிடாரங்கொண்டான் பகுதியில் எனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் ரூ.2 லட்சம் வரை செலவு செய்து பயிரப்பட்ட 2 ஆயிரம் வாழை மரங்களும் கஜா புயலில் முறிந்து விழுந்துவிட்டன.
பொங்கல் பண்டிகையின்போது அறுவடை செய்ய வேண்டி, தார் போட்டிருந்த நிலையில் வாழை மரங்கள் முற்றிலும் அடியோடு சாய்ந்துவிட்டன. தகுந்த நிவாரணத்தை அரசு உடனடியாக வழங்கினால்தான் பாதிப்பிலிருந்து மீளமுடியும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.