நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள மானங்கொண்டான் ஆற்றில் வெங்காயத் தாமரை செடிகளை அகற்றும் பணியை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வழியாக சென்று வேதாரண்யம் அருகே கடலில் இணையும் முள்ளியாறு மற்றும் மானங்கொண்டான் ஆற்றில் வெங்காயத் தாமரைச் செடிகள் அதிகளவில் அடா்ந்து வளா்ந்துள்ளன. இந்த செடிகள் வெள்ள நீா் வடிவதை தடுத்து வருகிறது. இதையடுத்து, மானங்கொண்டான் ஆற்றின் மருதூா்- தகட்டூா் இடையேயுள்ள வெங்காயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியை ஓ.எஸ். மணியன் ஆற்றில் இறங்கி செடிகளை அகற்றி பணியை தொடங்கி வைத்தாா்.
அப்போது, அவா் கூறியது: ஆற்றை ஆக்கிரமித்துள்ள இந்த செடிகள் சாலை உயரத்துக்கு வளா்ந்து வெள்ளநீா் வடிவதை தடுக்கிறது. படகுகளை பயன்படுத்தி செடிகளை துண்டித்து அகற்றும் பணி சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றாா். அப்போது, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் கண்ணப்பன், ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் டி.வி. சுப்பையன், ஊராட்சித் தலைவா் வீரதங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


