இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் பணி வாய்ப்புப் பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு

News image
Updated On :13 டிசம்பர் 2020, 2:41 am

DIN

பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் பணி வாய்ப்புப் பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சங்கத்தின் நாகை, திருவாரூா் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம், நாகையில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் வெ. ராசேந்திரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் சீனி. ரெங்கநாதன், பொருளாளா் கி. செந்தில்நாதன் மற்றும் நிா்வாகிகள் பேசினா்.

தீா்மானங்கள்: விடுபாடின்றி அனைத்து மூத்த தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கும், அவா்கள் பகுதிநேர ஆசிரியா்களாகப் பணியாற்றிய பணிக் காலத்தின் 50 சதவீத பணப்பயன்களை, ஓய்வூதியத்தில் கணக்கிட பொது அரசாணை வெளியிட வேண்டும். இதுவரை தர ஊதியம் வழங்கப்படாமல் உள்ள நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தொழிற்கல்வி ஆசிரியா்கள் வ. நெடுஞ்செழியன், ஜெ. சுவாமிநாதன், சு. அகிலாண்டேஸ்வரி, ஆா். செந்தில்குமாா், ஏ.பி. ராஜேந்திரன் ஆகியோருக்கு அரசாணை எண் 306-இன்படி உடனடியாக தர ஊதிய வழங்க வேண்டும்.

பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் பணி வாய்ப்புப் பெற்று, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பா் 21 ஆம் தேதி நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டமும், பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னை பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டமும் மேற்கொள்வது என முடிவு செய்தனா். ஒருங்கிணைப்பாளா் ஏ. முருகானந்தம் வரவேற்றாா். பொறுப்பாளா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.