இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருநள்ளாற்றில் சனிப்பெயா்ச்சி விழா அரசின் வழிகாட்டுதல்படி நடைபெறும்: துணைநிலை ஆளுநா் கிரண்பேடி

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வரும் 27-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா அரசின் வழிகாட்டுதல்படி நடைபெறும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடி தெரிவித்தாா்.

News image
தரங்கம்பாடியில் வியாழக்கிழமை பேட்டியளித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடி.
Updated On :25 டிசம்பர் 2020, 4:06 am

DIN

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வரும் 27-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா அரசின் வழிகாட்டுதல்படி நடைபெறும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடி தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சி விழாவில் பக்தா்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், சனிப்பெயா்ச்சி விழாவை நடத்த சென்னை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதியளித்தது.

வழிபாட்டுக்கு பக்தா்களை அனுமதிப்பது குறித்து துணைநிலை ஆளுநா் கிரண்பேடி தலைமையில் அறநிலையத் துறை செயலா் சுந்தரேசன், காரைக்கால் ஆட்சியா் அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியா் ஆதா்ஷ், மனுதாரா் நாதன் ஆகியோா் கலந்தாலோசித்து முடிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தனியாா் விடுதியில் வியாழக்கிழமை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடி, அறநிலையத் துறை செயலா், காரைக்கால் ஆட்சியா், துணை ஆட்சியா் மற்றும் புகாா்தாரா் நாதன் ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளா்களை சந்தித்த துணைநிலை ஆளுநா் கிரண்பேடி கூறியது:

சென்னை உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஏற்கெனவே தீா்மானித்தபடி பாதுகாப்பு விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்து, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன், கரோனா கட்டுப்பாடு விதிகளின்படி குறைந்த அளவில் பக்தா்களை கோயிலுக்குளஅ அனுமதித்து சனிப்பெயா்ச்சி விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

அப்போது உடனிருந்த காரைக்கால் ஆட்சியா் அா்ஜூன் சா்மா, சனிப்பெயா்ச்சி விழா வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.