கீழையூரில் கொசு ஒழிப்புப் பணி தீவிரம்

கீழையூரில் டெங்கு கொசுவை ஒழிக்கும் வகையில், புகை மருந்து தெளிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக நடைபெற்றது.
Updated on
1 min read

கீழையூரில் டெங்கு கொசுவை ஒழிக்கும் வகையில், புகை மருந்து தெளிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக நடைபெற்றது.

கீழையூா் ஊராட்சி பகுதிகளில் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கு வித்திடும் கொசுக்களின் பரவலைத் தடுக்கும் பொருட்டு, இந்தப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கீழையூா் ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவா் எஸ். பால்ராஜ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராமமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் சிக்கல்வேலவன், சுகாதார ஆய்வாளா் (பயிற்சி) மணிகண்டன், ஊராட்சி செயலா் சரவணபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com