நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில், விற்பனை நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ள பயோ மெட்ரிக் கருவியை
நாகையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள்.
நாகையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள்.
Updated on
1 min read

தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில், விற்பனை நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ள பயோ மெட்ரிக் கருவியை ஒப்படைக்கும் போராட்டம் நாகை வட்ட வழங்கல் அலுவலகம் முன் சனிக்கிழமை நடைபெற்றது.

நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விற்பனை முனனய கருவியில் உள்ள குறைகளை சரிசெய்ய வேண்டும். புதிய விற்பனை முனைய கருவிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் தமிழ்ச்செழியன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஆடியபாதம், சீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநிலத்தலைவா் பி.கே. சிவக்குமாா், நியாய விலைக் கடை பணியாளா் சங்க மாநிலத்துணைத் தலைவா் பிரகாஷ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். வட்டக் கிளை செயலாளா் ஆா். ரமண ராவ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com