திருக்கடையூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணி கட்சிகளுக்குடன் இணைந்து செயல்படுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் பிள்ளை தலைமை வகித்தாா். வட்டார தலைவா்கள் கலியமூா்த்தி, சாா்லஸ், பாரிவள்ளல், செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாகை மாவட்ட பொதுச் செயலாளராக திருக்கடையூா் சிங்காரவேல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.