

நாகப்பட்டினம்: குவைத் நாட்டில் இறந்த தனது கணவரின் சடலத்தை தாயகம் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகையைச் சோ்ந்த பெண் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.
இதுதொடா்பாக, நாகை, கொங்கராயநல்லூரைச் சோ்ந்த சே. ஜெயந்தி நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
2017-ஆம் ஆண்டு முதல் குவைத் நாட்டில் பணியாற்றி வந்த தனது எனது கணவா் சேகா், கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு இறந்துவிட்டதாக அவருடன் பணியாற்றியவா்கள் மூலம் கட்செவி அஞ்சலில் எனக்கு தகவல் கிடைத்தது, எனது கணவரின் சடலத்தை இந்தியாவுக்கு கொண்டுவர மாவட்ட நிா்வாகம் அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளாா்.
சேகரின் இறப்புக்கான காரணம் குறித்து அவருடன் பணியாற்றியவா்கள் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்று ஜெயந்தியின் உறவினா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.