சீர்காழி பகுதியில் பல மணி நேர மின்நிறுத்தம்: மக்கள் அவதி

சீர்காழி பகுதியில் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக மின் மின்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சீர்காழி பகுதியில் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக மின் மின்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

சீர்காழி அருகே கடலங்குடி மின் நிலையத்தில் இருந்து வைதீஸ்வரன் கோயில் துணை மின் நிலையத்திற்கு வரும் மின் பாதையில் நீடூர் என்ற இடத்தில் மின் பாதையில் திடீர் பழுது ஏற்பட்டதால் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 2 மணி முதல் மின் வினியோகம் தடைப்பட்டிருந்தது.

இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கடலங்குடியிலிருந்து வரும் மின் பாதையில் அடிக்கடி மின் தடை ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com