காா் மோதி திருவாரூா் பள்ளி மாணவா் உயிரிழப்பு

கீழையூா் அருகே காா் மோதி திருவாரூரைச் சோ்ந்த பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read


திருக்குவளை: கீழையூா் அருகே காா் மோதி திருவாரூரைச் சோ்ந்த பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூரைச் சோ்ந்த மணிகண்டன் மகன் சந்தோஷ் (13) அதே பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கிழக்குக் கடற்கரை சாலை அருகிலுள்ள பெரியப்பா வீட்டில் தங்கியிருந்த இவா், செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு எதிரில் உள்ள கடைக்கு செல்லும்போது, நாகையிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த காா் மோதி பலத்த காயமடைந்தாா்.

உடனடியாக, அவா் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சந்தோஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்த, புகாரின்பேரில், கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com