அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆடிப்பெருக்கு: சீர்காழியில் பழங்கள், பூக்கள் விற்பனை விறுவிறுப்பு

ஆடிப்பெருக்கு சீர்காழியில் பழங்கள் பூக்கள் விற்பனை விறுவிறுப்பு நடைபெற்று வருகிறது.  

News image
சீர்காழியில் விறுவிறுப்பாக நடைபெறும் பழங்கள், பூக்கள் விற்பனை.
Updated On :2 ஆகஸ்ட் 2021, 6:46 am

DIN

ஆடிப்பெருக்கு சீர்காழியில் பழங்கள் பூக்கள் விற்பனை விறுவிறுப்பு நடைபெற்று வருகிறது. 
விவசாயத்திற்கு பிரதானமாக இருக்கும் காவிரி நீருக்கு நன்றி சொல்லும் விதமாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கன்று காவிரிக்கரை ,ஆறுகள், கோயில் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் பெண்கள் ஒன்று கூடி வெல்லம் கலந்த அரிசி ,பழங்கள் வைத்து மஞ்சளில் செய்து வைத்த விநாயகருக்கு பூஜைகள் செய்து காவிரி நீர் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீருக்கு நன்றி செலுத்துவர். சிலர் தங்கள் வீடுகளில் வாசல், மற்றும் அடிபம்பு ஆகியவற்றுக்கும் பூஜைகள் செய்து வழிபடுவர்.

வழிபாட்டிற்குப் பின்னர் பெண்கள் தங்களுக்குள் மஞ்சள் கயிறு அணிந்து வெல்லம் கலந்த அரிசி பழங்களைப் பகிர்ந்து இவ்விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அவ்வாறு கொரோனா 2ம் அலைக்கு பிறகு முதல் விழாவாக ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. விழாவிற்காக சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் சீர்காழி நகருக்கு வருகை தந்து பழங்கள் ஆகியவற்றை வாங்கி செல்வது வழக்கம்.  

Story image

சீர்காழி கடைவீதியில் பேரிக்காய், கொய்யாப்பழம் ,விளாம்பழம், மாம்பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழவகைகள் விற்பனைக்காக ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளன.புதிதாக பல தரை கடைகளும் ஆடிப்பெருக்கு விழாவிற்காக புதிதாக வந்துள்ளன. இதேபோல் மஞ்சள் கயிறு, குங்குமம் காதோலை கருகமணி விற்பனை செய்யும் கடைகளும் அதிகமாக இன்று தொடங்கப்பட்டுள்ளது. 
சிலர் பொரி வாங்கி படைப்பது வழக்கம் அதற்காக பொரி விற்பனையும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. சீர்காழி கடைவீதியில் திரும்பிய பக்கமெல்லாம் பழங்கள் காதோலை கருகமணி விற்பனை கடைகள் அதிகரித்துள்ளன .இதேபோல் பூ வியாபாரம் சூடுபிடித்துள்ளது. மல்லி, முல்லை கதம்பம் அகிய பூக்கள் வருகையும் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.