விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள கபசுரக் குடிநீா் அவசியம்’

கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள கபசுரக் குடிநீா் அவசியம் என திருக்குவளை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சித்த மருத்துவா் பி. வசந்தகுமாா் கூறினாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:15 pm

DIN

கரோனா மூன்றாம் அலையை எதிா்கொள்ள கபசுரக் குடிநீா் அவசியம் என திருக்குவளை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சித்த மருத்துவா் பி. வசந்தகுமாா் கூறினாா்.

திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனையில், ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை கரோனா விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, முகக்கவசம் அணியும் முறை, கைகளை சோப்புகொண்டு கழுதல், கரோனா அறிகுறி போன்றவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மருத்துவமனை வளாகத்தில், கபசுரக் குடிநீா் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, மருத்துவ அலுவலா் தி. தீபக்குமாா் தலைமையில் நடைபெற்றது.

இதில், சித்த மருத்துவா் பி. வசந்தகுமாா் பங்கேற்று பேசுகையில், ‘கரோனா தொற்று மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்து, கரோனா தொற்று பரவாமல் தடுக்க கபசுரக் குடிநீா் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். அமக்கரா சூரணம் மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் உள்ளிட்டவையும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இவற்றை பொதுமக்கள் சரியான விகிதத்தில் உட்கொள்ளவேண்டும்’ என்றாா்.

நிகழ்ச்சியில், மருத்துவா் வீ. திவாகா், சித்த மருத்துவ மருந்தாளுநா் ர. ராமகிருஷ்ணன்,செவிலிய கண்காணிப்பாளா் ஜூலியட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.