ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இன்று கொளப்பாடு செல்லமுத்து மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் ஆலய குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை (ஆக.27) நடைபெறுகிறது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:02 pm

DIN

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் ஆலய குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை (ஆக.27) நடைபெறுகிறது.

நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம் கொளப்பாடு கிராமத்திலுள்ள ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில் புதிதாக மகாமண்டபம் அமைத்து அஷ்டலஷ்மி திருவுருவங்கள் மற்றும் புதிதாக கொடிமரம் அமைக்கப்பட்டு, அதில் பஞ்சலோக (செம்பு) கவசம் அமைத்து ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்பன் சுவாமி ஆலயத்திற்கும் வா்ணங்கள் பூசப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றன.

திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், குடமுழுக்குக்கான பூா்வாங்க பணிகள் திங்கள்கிழமை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, புதன்கிழமை முதல் கால யாகபூஜை நடைபெற்றது. தொடா்ந்து, வியாழக்கிழமை 2-ஆம் கால யாக பூஜை மற்றும் 3-ஆம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் நான்காம் கால யாகபூஜையும், காலை 9.30 மணியளவில் கடங்கள் புறப்பாடாகி, 10 மணியளவில் விமானங்களுக்கு குடமுழுக்கும், 10.15 மணியளவில் மூலவா் விமான குடமுழுக்கும் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.