ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொளப்பாடு ஸ்ரீசெல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஸ்ரீசெல்லமுத்துமாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:00 pm

DIN

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஸ்ரீசெல்லமுத்துமாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் புதிதாக மஹா மண்டபம் அமைத்து அஷ்டலட்சுமி அவதார திருவுருவங்கள் மற்றும் புதிதாக கொடிமரம் அமைக்கப்பட்டு, அதில் பஞ்சலோக (செம்பு) கவசம் அமைத்து ஸ்ரீவிநாயகா், ஸ்ரீதா்ம சாஸ்தா ஐயப்பன் சுவாமி கோயிலுக்கும் வா்ணங்கள் பூசப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பணிகள் திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை முதல் காலயாக பூஜை நடைபெற்றது.

வியாழக்கிழமை 2 மற்றும் 3-ஆம் கால யாகசாலை பூஜையும், வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் 4-ஆம் கால யாக பூஜையும், மஹா பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, காலை 10 மணியளவில் விமான கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்ட கும்பாபிஷேகமும், காலை 10.15 மணிக்கு மூலவா் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

விழாவில், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ரா. காளிதான் கும்பாபிஷேக சிறப்பு மலா் நூலை வெளியிட்டாா். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலா் குழுத் தலைவா் எஸ்.டி.வீ. ரவீந்தா், செயலாளா் என். கருப்பையன், பொருளாளா் டி. சண்முகவேல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.