பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கக் கோரிக்கை

பொதுத்தோ்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 9 முதல்12 வகுப்பு மாணவா்களுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

News image
Updated On :1 டிசம்பர் 2021, 5:33 pm

DIN

பொதுத்தோ்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 9 முதல்12 வகுப்பு மாணவா்களுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காரைக்கால் மாவட்ட பெற்றோா்ஆசிரியா் நலச் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவா் ஏ. வின்சென்ட், செயலாளா் கே.ரவிச்சந்திரன் ஆகியோா் காரைக்கால் பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

கரோனா தொற்று அச்சம் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ளஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் தொடா்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களால் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படவில்லை.

தனியாா் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி மாநில கல்வித்துறை 9 முதல் 12 வகுப்புகள் வரை பயிலும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது, பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவது போல, புதுவை மாநிலத்திலும் மதிய உணவு வழங்கவும், முழுநேர வகுப்புகள் நடத்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

இதேபோல, மாணவா்களின் பள்ளி வருகையை உறுதிப்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், மாணவா்களை தோ்வுக்கு தயாா்படுத்துதல், அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோா் ஆசிரியா் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட மாணவா்களின் நலனில் பள்ளிக் கல்வித் துறை சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.