பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருப்பட்டினம் புறவழிச்சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

காரைக்கால் அருகே திருப்பட்டினத்தில் குளம்போல் மாறியுள்ள புறவழிச்சாலையை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் அருகே திருப்பட்டினத்தில் குளம்போல் மாறியுள்ள புறவழிச்சாலையை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

சென்னை, புதுச்சேரியிலிருந்து நாகை செல்லும் முக்கிய சாலைகளில் ஒன்றாக காரைக்கால் திருப்பட்டினம் புறவழிச்சாலை அமைந்துள்ளது. இந்தசாலை அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே சேதம் அடைந்ததைத் தொடா்ந்து பொதுபணித்துறையினா் சாலையை தற்காலிகமாக சீரமைத்து போக்குவரத்துக்கு அனுமதித்தனா். இருப்பினும் அந்த சாலை சேதம் அடைந்நதால், பெரும்பாலான வாகனங்கள் திருப்பட்டினம் கடைத்தெரு வழியாக சென்று வருகிறது.

இந்நிலையில் அண்மையில் பெய்து வரும் கனமழையால் திருப்பட்டினம் புறவழி சாலையின் 3 கி.மீ தூர இடைவெளியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களில் மழைநீா் தேங்கி நிற்பதால் சிறு குளங்களைப்போல் காட்சி அளிக்கிறது. இதனால் புறவழிச்சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியது: திருப்பட்டினத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைந்த பிறகு திருப்பட்டினம் கடைத்தெருவில் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் பெரும் அளவில் குறைந்தது. ஆனால் சாலை பழுதடைந்த பிறகு, மீண்டும் கனரக வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்களும் அதிகரித்துள்ளன. இந்த சாலையை சீரமைக்கக் காரி மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திட்டத்தை சரியாக நிறைவேற்றாத காரணத்தால் சாலைகள் சேதம் அடைந்து, சீரமைக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளது. எனவே புறழிச்சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைத்து, போக்குவரத்தை விரைவில் அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.